In Paasuram #22 Andal speaks about how our past Karma can be dropped in an instant – all it needs is one glance from Bhagwan Krishna. Essentially, Bhagwan’s anugraha (grace) is all that is required to find Moksha. All that we do is become worthy of that grace.
As always do read Thirupaavai Paasuram #21 before reading Paasuram #22.
Click on this link to read the Paasurams and their meanings in Tamil – Thirupaavai Paadalkalum Villakamum.
Anganma Gnalathu – Paasuram #22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
Tamil Translation
கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!
English Translation
In Paasuram #22, Andal speaks of how God’s grace works. She says “Krishna, you just need to give us one look and all our sins/mistakes are gone. Basically our past Karma is gone in the instant that one gets enlightened. This is the way the Bhakti Marg works – they are lost in their devotion to their Ishta devta, in Andal’s case its Krishna and if Krishna were to merely look in her direction, she attains Moksha.
Paasuram #22’s literal translation is that several Kings and other important people besides us devotees are all standing here waiting for a glimpse of Bhagwan Krishna. They wait because they know that if you merely looked in their direction, your anugraha (grace) will wipe out all their past Karma.
Do read an earlier blogpost of mine on Karma and Sanatana Dharma.
MLV singing Thirupaavai Paasuram #22
Here’s the link to the Mp3 of Paasuram #21 on Wynk – https://wynk.in/u/prFHxSIBE
Note
The 30 paasurams known as Thirupaavai are written by Andal and are a part of the Naalayira Divyaprabhandams (4000 verses singing the praises of Bhagwan Vishnu). For Iyengars, it’s a lifelong mission to memorise the Naalayira Divyaprabhandams and understand their meaning. These songs are written by the 12 Azhwars (saints is the closest translation possible) of whom Andal is the only female.
#Thirupaavai #Margazhi